தம்புத்தேகம, இகிரிவௌ வயல் பிரதேசமொன்றில் கடந்த 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வானிலிருந்து விழுந்த மர்மப் பொருட்களில் மனிதர்களின் சாதாரண கண்களுக்குப் புலப்படாத நுண்ணங்கிகள் காணப்படுவதாக ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது என வைத்திய பரிசோதனை தொழில்நுட்ப விஞ்ஞானி கீர்த்தி விக்கிரமரத்ன தெரிவித்தார்.
சுமார் பத்து ஏக்கர் வயற்காணிகளில் இவ்வாறான மர்மப்பொருட்கள் பரவலாக விழுந்திருந்த நிலையில் நீர்நிலைகளில் விழுந்தவை மிதந்துகொண்டிருந்தன. இவற்றை ஆராய்ச்சிக்கு உட்படுத்திய போதே அவற்றில் நுண்ணங்கிகள் வாழ்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



0 comments to "வானத்தில் இருந்து விழுந்த விச நுண்ணங்கிகளால் பரபரப்பு"