Home » , , , , , , , » தமிழ் தேசியகூட்டமைப்பு தலைமைகளுக்கு ஓர் அவசர அவசிய வேண்டுகோள்;....

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்கள் அக் கூட்டமைப்பிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

நான்கு கட்சிகளுக்கும் கட்சிக்கொரு அமைச்சுப்பதவி வழங்குங்கள் என்று தமிழ் பேசும் மக்களாகிய நாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வேண்டுகோள் செய்கின்றோம். மக்களாகிய நாம் கட்சிகளின்கொள்கைகளுக்கோ அல்லது வேட்பாளர்களுக்கோ வாக்களிக்கவில்லை மாறாக தமிழ் மக்களின் ஐக்கியத்தை வெளிப்படுத்தி சர்வதேச ரீதியாக எமது உரிமையை வென்றெடுக்க அபிவிருத்தி, உதவிகள் போன்ற அனைத்து சேவைகளையும் மறந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்தோம். அதன் பிரதிபலனாக வடமாகாண சபை மூன்றில் இரண்டுக்கு மேலாக வெற்றி பெற்றுள்ள இந்ந சந்தர்ப்பத்தில் மாகாணஅரசையும், தமிழர்களின் உரிமைப்போராட்டத்தையும் வெற்றிகரமாக முன்னெடுத்து செல்வதற்கு ஏதுவாக கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் நான்கு கட்சிகளுகம் தலா ஒரு அமைச்சு என வழங்கி கூட்டமைப்பின் ஒற்றுமையைப் பலப்படுத்துவீர்கள் என நம்புகினறோம்.


தலைவர்களே! மக்கள்களாகிய நாங்கள் ஒற்றுமையாகவும் விட்டுக்கொடுப்புடனும் செயல்ப்பட்டுள்ளோம் . உங்கள் செயற்பாட்டையும் அப்படியே எதிர்பார்த்து..... கையொப்பமிட்டு அனுப்ப வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்காக மக்களாகிய நாம் மனம் வருந்துகின்றோம்.


நன்றி

இவ்வண்ணம்.
தமிழ்த் தேசிய கூட்டமைபிற்கு வாக்களித்த மக்கள்

0 comments to "தமிழ் தேசியகூட்டமைப்பு தலைமைகளுக்கு ஓர் அவசர அவசிய வேண்டுகோள்;...."

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer