Home » , , , , , , , » வடக்குத் தமிழரும் கிழக்கு முஸ்லிம்களும் இணைந்து தமீழீழத்தைக் கட்டியெழுப்ப முயல்கிறார்கள்....?

சந்தர்ப்பவாத அரசியலாளர்கள் இறந்தவர்களின் நெற்றிகளில் பொறிக்கப்பட்ட அரசொன்றைக் கட்டியெழுப்புவதற்கே முயற்சிசெய்கிறார்கள் என தேசிய சுதந்தர முன்னணி குறிப்பிடுகிறது.

அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கொழும்பு நகராளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் அவர்களினால் இவ்வாறு குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் வருமாறு:

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மாகாண சபைகளுக்குள் முழுமையாக செயற்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண சபையில் நேற்று முன்தினம் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டு அது வெற்றிபெற்றுள்ளது. அது மிகப் பாரதூரமான காரியம் என்று குறிப்பிடுகின்றது தேசிய சுதந்திர முன்னணி. 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபைகள் என்பன பிரிவினைவாதத்திற்கு வழிகாட்டக்கூடியன என்பதே தேசிய சுதந்திர முன்னணியின் நிலைப்பாடாகும். தற்போது வடக்கு கிழக்கில் உள்ள மாகாண சபைகளின் அதிகாரங்கள் கூட பிரிவினைவாதத்தை போஷிப்பவை என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் 13 இனை உள்ளது உள்ளவாறே செயற்படுத்தற்கு கிழக்கு மாகாண சபையில் கொண்டுவரப்பட்டுள்ள வெற்றிகண்டுள்ள பிரேரணையானது பயங்கரமானதாகும். நாங்கள் இதற்கு முன்னரும் பலமுறை சுட்டிக் காட்டியது என்னவென்றால், வடக்கு கிழக்கினை மீண்டும் ஒன்றிணைப்பதானது மீண்டும் ஈனியா வுடனான தமிழ் அரசு மற்றும் முஸ்லிம் அரசுத் துண்டங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வழிவகுப்பதாகும். பிரிவினைவாதத்துடனான யுத்தத்தை தோல்வியடையச் செய்து, பெற்றுக் கொண்டுள்ள வெற்றியை சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவரும் அனுபவிக்கவிடாது, அவர்கள் அனைவரையும் மீண்டும் இருண்ட யுகத்திற்குள் பலாத்காரமாகத் தள்ளும் முயற்சியாகும்.

(கலைமகன் பைரூஸ்)

0 comments to "வடக்குத் தமிழரும் கிழக்கு முஸ்லிம்களும் இணைந்து தமீழீழத்தைக் கட்டியெழுப்ப முயல்கிறார்கள்....?"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer