Home » » வட மாகாணத்தில் தற்காலிகமாக கடமையாற்றிய 1,083 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்கள்

வட மாகாணத்தில் தற்காலிகமாக கடமையாற்றிய 1,083 பட்டதாரிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன.

யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின் ஆகியோர் இந்த நியமனக் கடிதங்களை வழங்கினர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வட மாகாணத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் கால்நடை, விவசாயம், பொருளாதார அபிவிருத்தி சார்ந்த திணைக்களங்களிலும் தற்காலிகமாக பணியாற்றி வந்த  பட்டதாரிகளுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

0 comments to " வட மாகாணத்தில் தற்காலிகமாக கடமையாற்றிய 1,083 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்கள்"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer