இலங்கை ஒரு இந்து ராச்சியம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்ப மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்து மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கையின் அகழ்வாராய்சியாளர் எல்லாவல்ல மேதாநந்த தேரர் இந்த கருத்தை நிராகரித்துள்ளார்.
இலங்கையின் வரலாற்றை மாற்றி அமைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ராமர் மற்றும் மன்னர் இராவணன் தொடர்பிலான இராமாயனம் என்ற இதிகாசம் ஒரு இலக்கியம் மாத்திரமே என்று தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சீனிதம்பி யோகேஸ்வரன், இலங்கையில் சில இந்து மன்னர்களும் இருந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.




0 comments to "இலங்கையில் பல தசாப்பதங்களுக்கு முன்பே இந்து மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள்"